Search This Blog

Sunday, 31 May 2015

மருத்துவர் இராமதாசும் தமிழீழமும்.

மருத்துவர் இராமதாசும் தமிழீழமும்.
==================================================
90களின் ஆரம்ப காலங்களில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை சொன்னாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலேயே, சென்னை மெரினாவில் பத்து லட்சம் தமிழர்களை திரட்டி ஈழத்து சொந்தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "என் இனத்தின் தலைவன் பிரபாகரன் மட்டுமே" என வீர முழக்கமிட்ட ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக எத்தனையோ பேர் போராடினாலும், மாவீரன் பிரபாகரன் அவர்கள், மாவீரர் நாள் உரையின் போது அவர் வாயால் பாராட்டப் பெற்ற முதல் தமிழக அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
மாவீரனின் உரை பின்வருமாறு.
"ஈழத்தமிழருக்காகவும் தமிழுக்காகவும் போராடிவரும் ராமதாசுக்கு வாழ்த்துக்கள். ஈழத்திற்கு ஆதரவாக, தமிழைப் போற்றும் மக்கள் தொலைக்காட்சி ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டிலும் பார்க்கப்பட வேண்டும்".
பசுமைத்தாயகம் எனும் அமைப்பைத் தொடங்கி, ஐ.நா சபை வரை சென்று ஈழத் தமிழருக்கு ஆதரவாக இன்று இந்த நிமிடம் வரை போராடி வரும் போராளி.
ஈழத்தில் எம் உறவுகளுக்கு நடந்த கொடுமையை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய(தடைகளை எதிர்த்து) தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனர்.
இதை எதையும் அரசியலாக்காமல் பசுமை தாயகம் மூலம் உறுதியுடன் போராடிக் கொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்.