Search This Blog

Wednesday, 27 July 2016

முனியப்பன் வழிபாடு


காவல் தெய்வ வழிபாட்டுக்கு பெயர்போன சேலம் மாவட்டம்.

ஒரு குறிப்பிட்ட குடும்பமோ இனக்குழுவோ ஊர் மக்களாளோ வணங்கப்படும் தெய்வங்கள் குதெய்வங்கள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளன. பெரும்பாலான காவல்தெய்வ வழிபாடு என்பது தத்தம் முன்னோர் வழிபாடே. காவல்தெய்வ வழிபாட்டில் பிரதான இடம் பிடிப்பது முனியப்பன். முனியப்பன் என்பது "முன்னை + அப்பன்" என்பதன் புணர்ச்சி. அதாவது போரிலோ, ஆநிரைகாத்தோ, ஊர் காத்தோ இறந்துபட்ட வீரர்களுக்கு அவரின் குடும்பத்தார் மற்றும் ஊரார் கல் வைத்து வழிபடுகின்றனர். இது நடுகல் எனப்பட்டது. அந்த நடுகற்கள் கால ஓட்டத்தில் முனியப்பனாராக உருமாறி இருக்கும்.
சேலம் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமம், அருள்மிகு பச்சியம்மன் கோவிலில் உள்ள வாமலையப்பன் எனும் வாழ் முனி.
ஒருசில இடங்களில் முனியப்பனார் தத்தம் துணைவியாருடன் அமர்ந்து காட்சியளிக்கிறார்கள். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தில் அருள்மிகு மஹா நல்ல முனியப்ப ஸ்வாமி உடனமர்ந்து காட்சியளிக்கிறார் நல்ல தாயார். இது பொன் போட்டால் பொன் விளையும் போத்தமங்கலம் காணியுடைய மக்களின் குல தெய்வமாகும்.  


அருள்மிகு மஹா நல்ல முனியப்ப ஸ்வாமி உடனமர் நல்ல தாயார்


சில கோவில்களில் முனிகளுக்கு தனியாக பரிவாரங்கள் இருக்கும். முனிகளின் பிரம்மாண்ட உருவங்களுக்கேற்ப வானுயர்ந்த குதிரைகள், வேட்டை நாய்கள், காவல் வீரர்கள் சகிதம் முனியப்பன் இரவில் வேட்டைக்கு செல்வதாக இன்றும் ஒரு ஐதீகம் உண்டு. அவ்வாறு வேட்டைக்கு செல்லும்போது எதிரே யாரும் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் முனி அடித்துவிடும் என்றும் சொல்லப்படுவதுண்டு. 

சேலம் அரிசிப்பாளையத்தில் உள்ள முனியப்பன். குதிரை, வீரர் மற்றும் வேட்டை நாய்களுடன்
 இப்போதிருக்கும் முனியப்பன்கள் தோற்றத்தில் கம்பீரமாக மிக உயரமாக (20 அடி உயரம் வரை கூட) முறுக்கு மீசையுடன் வாளேந்தி அமர்ந்திருக்கின்றனர். ஆனால் இவர்களின் மூலவர் என்னவோ கூம்பு வடிவிலான சிறு கல் உருவங்களே. சேலம் மாவட்டத்தில் திரும்பிய திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். வாழ் முனியாக, செம்முனியாக, வேதமுனியாக, நல்ல முனியாக, பூமுனியாக, வெண்ணங்கொடி முனியாக பல்வேறு பெயர்களுடன் ஆங்காங்கே தத்தம் எல்லைகளில் அமர்ந்து ஆட்சி நடத்துகின்றர். மாவட்டத்தில் பரவலாக மக்கள் தங்களது வயல்களின் ஓரத்திலும் ஏரிக்கரைகளிலும் முனியப்பனுக்கான வாழ்விடங்களை அமைக்கின்றனர். பச்சியம்மன் கோவில்களில் உப தெய்வங்களாக வீற்றிருக்கும் இவர்களுக்கு காவல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும். நகரமயமாக்கலில் பல அடையாளங்களை இழந்த சேலத்தில் முக்கிய மையப் பகுதிகளில் இன்றும்கூட முனியப்பனுக்கு கோவில் இருப்பதைப் பார்த்தால் அவருக்கான முக்கியத்துவம் புலப்படுகிறது. NH 7ல் செல்லும் சரக்கு வாகனங்கள் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலிலும் மாவட்ட எல்லையான தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவிலிலும் பூசையிட்டு வணங்கிவிட்டே நகர்கின்றன.
அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன்
ஆளானப்பட்ட மேட்டூர் அணையையே தன் பாத வலிமையால் தாங்கிப் பிடித்திருப்பது அணைக்கட்டு முனி தான் எனும் நம்பிக்கை அனைவரிடமும் படர்ந்து கிடக்கக் காரணமில்லாமல் இல்லை. அணை கட்டுமானத்தின் போது எத்தனையோ மக்கள் குடியிருப்புகளை காலி செய்த வெள்ளையர்களால் முனியப்பனின் குடியிருப்பை காலி செய்ய முடியவில்லை என்பதுதான். நார்த்திகம் பேசுவோருக்கு இது நாக்கை துருத்திக்கொண்டு கோரைப் பற்களுடன் அமர்ந்திருக்கும் ஒரு கட்டுமானமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் நம் பல வீர செயல்கள் புரிந்த நம் முன்னோர்கள் என்பதே நிதர்சனம். 



Gowtham Palanivel
மேட்டூர் முனியப்பன் 

Monday, 15 June 2015

பாட்டாளி மக்கள் கட்சியின் இலவசம்.



பாட்டாளி மக்கள் கட்சியின் இலவசம்.
============================================================

வரும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களம்கண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி அதன் இளைஞர் சங்கத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் வாக்குறுதிககளையும் அறிவித்துள்ளது. அதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் வேளாண் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம். இது பரவலாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் விவாத பொருளாக மாறி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் தனது விளிம்பு நிலையைத் தொட்டு அழிந்து வரும் நேரத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த தேர்தல் அறிவிப்பு தேர்தல் நோக்கர்களாலும், அரசியல் ஆர்வலர்களாலும், பொது மக்களாலும், ஏன் மாற்று கட்சியினராலுமே பெரிதும் பேசப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உழவுந்து(tractor) இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதாகும். "உழுதவன் கணக்குப் பாத்தா ஏரு கூலிக்குக் கூட மிஞ்சாது" என்று கிராமங்களில் ஒரு கூற்று உண்டு. அவ்வாறு தான் உள்ளது இன்று உழவர்களின் நிலை. டிராக்டர் ஏர் கூலியே சிறு குறு விவசாயத்தில் பெரும் செலவாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்தினாலே கணிசமான தொகையை மீதி படுத்தலாம். இலவச உழவுந்து வழங்கினால் பாதி விலைக்கு உழுது கொடுக்க முடியும். அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பயனடைவார்கள்.

அந்த உழவுந்தை ஓட்டுவதற்கான ஓட்டுனர்கள் தேவைப்படுவார்கள். அதனால் நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். அதன் பராமரிப்பு போன்ற செயல்களால் பல பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுவர். சிறு விவசாயிகளுக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்.
இவ்வளவு அருமையான பல திட்டங்களை தேர்தல் அறிவிப்புகளாக வெறியிட்டிருக்கும் பாமக வின் செயல்பாடுகளை மக்கள் கவனனிக்கத் தொடங்கியுள்ளனர்.

மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் மக்களின் பார்வையில் நல்லதொரு மாற்று அரசியலைத் தரக் காத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்போம்.

கௌதம் பழனிவேல்.

Sunday, 31 May 2015

மருத்துவர் இராமதாசும் தமிழீழமும்.

மருத்துவர் இராமதாசும் தமிழீழமும்.
==================================================
90களின் ஆரம்ப காலங்களில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை சொன்னாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலேயே, சென்னை மெரினாவில் பத்து லட்சம் தமிழர்களை திரட்டி ஈழத்து சொந்தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "என் இனத்தின் தலைவன் பிரபாகரன் மட்டுமே" என வீர முழக்கமிட்ட ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக எத்தனையோ பேர் போராடினாலும், மாவீரன் பிரபாகரன் அவர்கள், மாவீரர் நாள் உரையின் போது அவர் வாயால் பாராட்டப் பெற்ற முதல் தமிழக அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
மாவீரனின் உரை பின்வருமாறு.
"ஈழத்தமிழருக்காகவும் தமிழுக்காகவும் போராடிவரும் ராமதாசுக்கு வாழ்த்துக்கள். ஈழத்திற்கு ஆதரவாக, தமிழைப் போற்றும் மக்கள் தொலைக்காட்சி ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டிலும் பார்க்கப்பட வேண்டும்".
பசுமைத்தாயகம் எனும் அமைப்பைத் தொடங்கி, ஐ.நா சபை வரை சென்று ஈழத் தமிழருக்கு ஆதரவாக இன்று இந்த நிமிடம் வரை போராடி வரும் போராளி.
ஈழத்தில் எம் உறவுகளுக்கு நடந்த கொடுமையை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய(தடைகளை எதிர்த்து) தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனர்.
இதை எதையும் அரசியலாக்காமல் பசுமை தாயகம் மூலம் உறுதியுடன் போராடிக் கொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்.